TNPSC Thervupettagam

காந்தி சாகர் சரணாலயத்தில் சிவிங்கிப் புலிகள்

April 24 , 2025 17 hrs 0 min 41 0
  • மத்தியப் பிரதேசத்தின் மண்டசௌர் மாவட்டத்தில் உள்ள காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு சிவிங்கிப் புலிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
  • பவாக் மற்றும் பிரபாஷ் என்ற ஆறு வயது ஆண் சிவிங்கிப் புலிகள், 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டன.
  • இந்த சரணாலயத்திற்கு மாற்றப் படுவதற்கு முன்பு அவை குனோ தேசியப் பூங்காவில் தங்க வைக்கப்பட்டன.
  • காந்தி சாகர் சரணாலயம் ஆனது குனோ தேசியப் பூங்காவிற்கு அடுத்தபடியாக, அம்மாநிலத்தில் மட்டுமின்றி, நாட்டிலும் சிவிங்கிப் புலிகள் இடமாற்றம் செய்யப்படும் இரண்டாவது இடமாக மாறியுள்ளது.
  • குனோ தேசியப் பூங்காவில் தற்போது 26 சிவிங்கிப் புலிகள் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்