TNPSC Thervupettagam

கானமயில் – இனப்பெருக்கம்

January 7 , 2020 1657 days 883 0
  • கானமயில் (ஆர்டியோடிஸ் நிக்ரிசெப்ஸ் - Great Indian Bustard) இனப்பெருக்கத்தில் இந்தியா ஒரு வெற்றிகரமான உலக சாதனையைப்  படைத்துள்ளது.
  • தற்பொழுது இந்த இனத்தில் 150 பறவைகள் உலகளவில் எஞ்சியுள்ளன என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இது இந்திய துணைக் கண்டத்தில் மட்டுமே வாழும் ஒரு பறவை இனமாகும்.
  • இது இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் (பாலைவன தேசியப் பூங்கா), குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றது.

பாதுகாப்பு நிலை:

  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்பு பட்டியலில் இது “மிக அருகிய இனமாக” வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் அட்டவணை Iல் இது பட்டியலிடப் பட்டுள்ளது.
  • CITES இன் (அருகிவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தம் - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) அட்டவணை Iல் பட்டியலிடப் பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

  • கானமயில் திட்டம்:
    • இது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ராஜஸ்தான் அரசின் ஒரு திட்டமாகும்.
    • பாலைவன தேசியப் பூங்காவில் இந்தப் பறவைகள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வதை உறுதி செய்வதற்காக இந்தப் பறவைகளுக்கான வாழிடங்களை அமைத்தல் மற்றும் இந்தப் பறவைகள் வாழும் பகுதிகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள இது திட்டமிட்டுள்ளது.
  • கானமயில் மீட்புத் திட்டம்:
    • இது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்