குஜராத்திலுள்ள கட்ச் கானமயில் சரணாலயத்தில் கானமயில்கள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கட்ச் மாவட்டத்தின் அப்தசா வட்டாரத்திலுள்ள கட்ச் கானமயில் சரணாலயமானது 1992 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 2 சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட ஒரு சிறிய சரணாலயமாகும்.
ஆனால் 220 ச.கி.மீ. வரை பரவியுள்ள இதனுடைய சுற்றுச்சூழல் தாங்கு மண்டலப் பகுதியானது கானமயில்களின் இன்றைய வாழ்விடங்களின் பெரும்பாலான பகுதியாக உள்ளது.
கானமயிலானது இந்தியாவிலுள்ள கானமயில் என்ற நான்கு பெரிய பறவை இனங்களில் மிகவும் பெரிதானதாகும்.
மேக்குயின்ஸ் கானமயில், வரகுக் கோழி மற்றும் வங்காள வரகுக்கோழி ஆகியவை மற்ற மூன்று இனங்களாகும்.
உயர்நிலை மின் பரிமாற்றக் கம்பிகள் (Overhead power transmission lines) கான மயில்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
குறிப்பு
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய இடங்களிலுள்ள கானமயில்களின் முக்கிய வாழ்விடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர்நிலைப் மின்பரிமாற்றக் கம்பிகளும் நிலத்தடியில் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
மேலும் இந்த ஆணையை அமல்படுத்துவதற்கு மின் நிலைய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்து உள்ளது.