TNPSC Thervupettagam

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப்

December 20 , 2021 943 days 408 0
  • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப் போட்டிகளில் ஆடவருக்கான 81 கி.கி. எடைப் பிரிவில் வெற்றிப் பெற்றதன் மூலம் அஜய் சிங் இந்தியாவிற்கான 3வது தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • மேலும் அஜய் சிங் மொத்தம் 322 கி.கி. எடையைத் தூக்கி, ஸ்நாட்ச் பிரிவில் (147 கி.கி) ஒரு தேசியச் சாதனையையும் படைத்தார்.
  • மேலும் பர்மிங் ஹாம் என்னுமிடத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு நேரடியாகத் தேர்வான 3வது இந்தியப் பளுதூக்குதல் வீரர் எனும் பெருமையையும் இவர் பெற்றார்.
  • ஜெரிமி லால்ரிநுங்கா (67 கி.கி.) மற்றும் அசிந்தா சியூலி (73கி.கி.) ஆகியோர் அவரவர்களுக்கான போட்டிகளில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்