அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமானது (All India Institutes of Medical Sciences - AIIMS) 2018-19 ஆம் ஆண்டிற்கான (தொகுதி A பிரிவு) அரசாங்கத்தின் காயாகல்ப் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பிலான முதல் பரிசைப் பெற்றுள்ளது.
காயாகல்ப் விருதானது 2015 ஆம் ஆண்டு மே 15 அன்று 'ஸ்வச் பாரத் அபியானின்' கீழ் ஒரு பகுதியாக நிறுவப் பட்டுள்ளது.
இது பொது இடங்களில் தூய்மையை ஊக்குவிப்பது என்ற கருத்துருவின் மீது அதிக அளவு தூய்மை, சுகாதாரம் மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளை நிரூபித்துப் பொதுச் சுகாதார வசதிகளை அங்கீகரித்து மேம்படுத்துவதற்கான ஒரு தேசிய முயற்சியாகும்.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் ஆனது ₹ 1.5 கோடி பரிசுத் தொகையுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.