1999 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று இந்திய அரசானது விஜய் நடவடிக்கையை நிறைவு செய்து கார்கில் பகுதியில் 3 மாதம் நடைபெற்ற போரில் தாம் வெற்றி பெற்றதாக அறிவித்தது.
கார்கில் போரானது ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியின் அருகே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற ஆயுதம் ஏந்திய ஒரு போராகும்.
விஜய் ராணுவ நடவடிக்கையானது இந்திய வரலாற்றில் 2 முறை இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலாவது விஜய் நடவடிக்கையானது கோவாவைக் கைப்பற்றுவதற்காக 1961 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவது விஜய் நடவடிக்கையானது 1999 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வெள்ளைக் கடல் ராணுவ நடவடிக்கையும் 1999 ஆம் ஆண்டில் கார்கில் போரின் போது மேற்கொள்ளப்பட்டது.