நுண்ணிய துகள் பரவலால் ஏற்படும் காற்று மாசுபாடு (PM2.5) ஒரு சராசரி இந்தியரின் ஆயுட்காலத்தை 5.3 ஆண்டுகள் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள், வருடாந்திர சராசரி நுண்ணிய துகள் மாசு அளவு உலக சுகாதார அமைப்பின் வரம்பினை மீறிக் காணப்படும் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர்.
சுமார் 67.4 சதவீத மக்கள், நாட்டின் தேசியக் காற்றுத் தர அளவான 40 µg/m3 என்ற வரம்பினைத் தாண்டிய பகுதிகளில் வாழ்கின்றனர்.
நாட்டின் தேசிய சுற்றுப்புறக் காற்றின் தரத் தரநிலைகள் (40 µg/m3) பூர்த்தி செய்யப் படா விட்டால், டெல்லியில் வாழும் மக்கள் தங்களது ஆயுட்காலத்தில் 8.5 ஆண்டுகள் வரை இழக்க நேரிடும்.
1998 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், சராசரி வருடாந்திர நுண்ணிய துகள் மாசுபாடு 67.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது சராசரி ஆயுட்காலத்தை மேலும் 2.3 ஆண்டுகள் குறைக்கிறது.
தெற்காசியாவில் 2013 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான ஒரு காலக் கட்டத்தில் நுண்ணிய துகள் மாசுபாடு 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில், PM2.5 மாசுபாடு அளவுகள் 9.5 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இது பாகிஸ்தானில் 8.8 சதவீதமாகவும் வங்காளதேசத்தில், 12.4 ஆகவும் உயர்ந்துள்ளது.