TNPSC Thervupettagam

"காலநிலை மாற்றம் மற்றும் நிலம்" பற்றிய அறிக்கை

December 27 , 2022 572 days 398 0
  • காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) பருவநிலை மாற்றம் மற்றும் நிலம் மீதான சிறப்பு அறிக்கையை வெளியிட்டது.
  • மனிதப் பயன்பாடு நேரடியாக 70% (69-76%) பனிக்கட்டி இல்லாத உலகளாவிய நிலப் பரப்பைப் பாதிக்கிறது.
  • தற்போதைய தீவிர விவசாய முறை மண் சிதைவு மற்றும் நிலையான இழப்புகளுக்கு வழி வகுத்தது.
  • அடுத்த 50 ஆண்டுகளுக்குக் கூட உலகிற்கு உணவளிக்கப் போதுமான மண் வளம் இல்லை.
  • இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, வளிமண்டலக் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் ஆண்டுக்கு மில்லியனுக்கு 1.3 பாகங்களாக உயர்ந்து வருவது பதிவு செய்யப் பட்டு உள்ளது.
  • இது முந்தைய 100 ஆண்டுகளை விட நான்கு மடங்கு வேகமாகவும் கடந்த 5,000 ஆண்டுகளை விட 400 மடங்கு வேகமாகவும் உள்ளது.
  • நமது உணவின் சுற்றுச்சூழலின் தாக்கம் பற்றிய நமது அறிவு அதிகரித்துள்ள போதிலும், 1998 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய இறைச்சி நுகர்வு 58% அதிகரித்துள்ளது.
  • தாவர எண்ணெய் நுகர்வு 2013 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 30% அதிகரித்துள்ளது.
  • 2008 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் அரிசி நுகர்வு 17% அதிகரித்துள்ள நிலையில் கோதுமை நுகர்வு 6% உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்