TNPSC Thervupettagam

காலா அசார் (அ) டம் டம் காய்ச்சல் (அ) கருங்காய்ச்சல்

August 21 , 2017 2523 days 2412 0
  • காலா அசார் நோய் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஒட்டுண்ணிக் கொல்லி ஆகும் .முதலாவது பெரிய ஒட்டுண்ணிக்கொல்லி மலேரியா ஆகும்.
  • காலா அசார் என்றழைக்கப்படும் ‘விஸ்செரல் லீ ஷ்மேனியாசிஸ்’ (Visceral leishmaniasis- VL) ஆனது லீஷ்மேனியாசிஸின் (leishmaniasis) மிகவும் கொடிய வடிவம் ஆகும்.
  • லீஷ்மேனியா புரோட்டாசோவா ஒட்டுண்ணிகளின் காரணமாக லீஷ்மேனியாசிஸ் ஏற்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட பெண் மணல் கொசுக்கள் (Sandflies) மூலமாக மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது
  • இது மனிதர்களுக்கு மட்டுமே பாதிப்பினை ஏற்படுத்துகிறது , பிற விலங்கு இனங்களை பாதிப்பதில்லை
  • இதன் அறிகுறிகள் : தொடர்ந்து காய்ச்சல், எடைகுறைவு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், மற்றும் ரத்த சோகை
  • இந்த ஒட்டுண்ணிகள் மனித உள்ளுறுப்புகளுக்குள் ஊடுருவி கல்லீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையினை பாதிப்படையச் செய்கிறது. இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிடில் மரணம் ஏற்படும்.
  • ஆர்.கே.39 போன்ற ரத்தப் பரிசோதனைகள் மூலம் ஒட்டுண்ணிகள் மனிதனின் உடலில் இருக்கிறதா என அறிந்துக்கொள்ளலாம்.
  • பீகார். ஜார்க்கண்ட், உத்திரப்பிரேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இந்நோய் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்