ஜுன் 21 அன்று காலேஸ்வரம் ஏற்று நீர்ப் பாசனத் திட்டமானது (KLIP - Kaleshwaram Lift Irrigation Project) தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவால் தொடங்கி வைக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய மற்றும் பலபடி நிலை கொண்ட இந்த பல பயன்பாட்டு ஏற்று நீர்ப்பாசனத் திட்டமானது கோதாவரி நதியின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ளது.
KLIP ஆனது நீரை அரை கிலோமீட்டர் உயரத்திற்கு ஏற்றம் செய்யும்.
இது மிகக்குறுகிய காலத்தில் முடிக்கப் பெற்ற இதே வகையைச் சேர்ந்த உலகின் பெரிய திட்டமாகக் கருதப்படுகின்றது.