TNPSC Thervupettagam

காலை உணவுத் திட்ட விரிவாக்கம் 2024

July 16 , 2024 3 days 115 0
  • தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தினை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தினைத் தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் பள்ளியில் இந்தத் திட்டத்தினை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இந்த நடவடிக்கையினால் இந்த மாநிலம் முழுவதும் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள 2,23,536 குழந்தைகள் பயனடைவார்கள்.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று காலை உணவுத் திட்டத்தினை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்.
  • 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று, இந்த மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவாக்கப் பட்டதுடன், 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் சுமார் 18.50 லட்சம் மாணவர்கள் இந்த முன்னெடுப்பின் கீழ் பயனடைந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்