TNPSC Thervupettagam

காலை உணவுத் திட்டத்தின் தாக்கம்

March 18 , 2024 123 days 287 0
  • தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள 1,543 அரசுப் பள்ளிகளுள் 1,319 பள்ளிகளில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளது.
  • திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 100% வருகைப் பதிவு உள்ளது.
  • இந்த மாவட்டங்களைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி (98.5%), கரூர் (97.4%) மற்றும் நீலகிரி (96.8%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • 1,086 பள்ளிகளில், வருகை அதிகரிப்பு 20% ஆகவும், 22 பள்ளிகளில் 40 சதவீதத்திற்கு அதிகமாகவும் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்