TNPSC Thervupettagam

கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் அதிக கோல் அடித்தவர்

June 17 , 2018 2225 days 700 0
  • இந்திய கால்பந்து அணியின் தலைவரான சுனில் சேத்ரி (33 வயது) தற்சமயம் நடப்பில் விளையாடிக் கொண்டிருக்கும் அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸியுடன் இணைந்து இரண்டாவது அதிக சர்வதேச கோல் அடித்த வீரராக உருவெடுத்துள்ளார்.
  • இவர் மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்ற இந்தியா மற்றும் கென்யாவிற்கு இடையேயான இன்டர்காண்டினென்டல் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் தனது 64வது கோலை அடித்து இப்பெருமையைப்  பெற்றார்.

  • இந்த ஆட்டத்தில் சேத்ரி இரண்டு கோல்களை அடித்தார்.
  • முன்னாள் கேப்டன் பைச்சுங் பூட்டியாவிற்கு பிறகு 100 சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய இரண்டாவது இந்தியரான சுனில் சேத்ரியின் 102-வது சர்வதேச ஆட்டம் இதுவாகும்.
  • கோல்கள் அடித்ததன் அடிப்படையில், 150 ஆட்டங்களில் 81 கோல்களை அடித்த போர்ச்சுகலின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அடுத்து இவரும் மெஸ்ஸியும் உள்ளனர்.
  • சேத்ரியும் மெஸ்ஸியும் தற்போது ஒட்டு மொத்தமாக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 21வது இடத்தை இணைந்து பகிர்ந்துள்ளனர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்