முன்னாள் முதல்வர் C.N. அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 அன்று 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
ஆவடி மற்றும் தாம்பரம் ஆகியவை காவல்துறை ஆணையரகமாக தரம் உயர்த்தப் படும் எனவும் அவர் அறிவித்தார்.
காவல்துறையைச் சீர்திருத்துவதற்காக ஒரு காவல் ஆணையத்தினை அமைக்கவும் அவர் முன்மொழிந்தார்.
இணையவழிக் குற்றங்களை ஒழிக்கவும் அதற்கான பயிற்சிகளை வழங்கவும் மாநில இணையவழி குற்றப் புலனாய்வு மையம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
மீனவச் சமூகத்தினைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் கடலோரக் காவல்படையுடன் இணைந்து பணியாற்றும் வகையில் நியமிக்கப் படுவர்.
சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப் பட்ட நிலையிலுள்ள குழந்தைகள் சமூக விரோதம் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க சிறுவர் மற்றும் பெண்கள் குழுக்கள் அமைக்கப்படும்.
இரண்டாம் நிலைக் காவலர் முதல் தலைமைக் காவலர் வரை காவல்துறை ஊழியர்களுக்கு வாராந்திர விடுமுறை அளிக்கப்படும்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவர்.