TNPSC Thervupettagam

காவிரியில் 450 டி.எம்.சி தண்ணீர்

October 13 , 2022 648 days 355 0
  • இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை, தமிழகத்தின் காவிரி நீரைப் பெறுவதில் இருந்த முந்தைய அனைத்துச் சாதனைகளையும் முறியடித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் மே மாதத்திற்குள் மொத்தம் பெற்ற நீரின் அளவு 500 டிஎம்சி அடியைத் தாண்டும்.
  • மத்திய நீர் ஆணையம் (CWC) இதனை அறிவித்துள்ளது.
  • அளவீட்டுக்கானக் குறிப்புப் புள்ளியான பிலிகுண்டுலு நிலையம் CWC அமைப்பால் பராமரிக்கப் படுவதால் இதன் கணக்கீடுகள் மட்டுமே பரிசீலிக்கப்படுகின்றன.
  • ஏனெனில் 1974-75 ஆம் ஆண்டில் இருந்து கணக்கிடுகையில், 1975-76 ஆம் ஆண்டில் பெற்ற 455.4 டிஎம்சி அடி என்ற அளவில் பெற்ற நீரே அதிகபட்ச அளவாக இருந்தது.
  • இதுவே 2016 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு உயர்மட்டத் தொழில் நுட்பக் குழுவால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் ஆகும்.
  • 1978-79 ஆம் ஆண்டிற்கான மொத்த தோராயமான அளவு 400.6 டிஎம்சி அடி; 1980-81 ஆம் ஆண்டிற்கான மொத்த தோராயமான அளவு 442.9 டிஎம்சி அடி; 1981-82 ஆம் ஆண்டிற்கான மொத்த தோராயமான அளவு 417 டிஎம்சி அடி; மற்றும் 2018-19 ஆம் ஆண்டிற்கான மொத்த தோராயமான அளவு 405.4 டிஎம்சி அடி.
  • நடப்பு ஆண்டில், ஓட்டு மொத்தமாக பெறப்பட்ட நீரின் அளவு நான்கு மாதங்களில் 450 டிஎம்சி அடி அளவை எட்டியுள்ளது.
  • அந்த நான்கு ஆண்டுகளில் தென்மேற்குப் பருவமழை முறையே 291 டிஎம்சி அடி, 342 டிஎம்சி அடி, 299 டிஎம்சி அடி மற்றும் 345 டிஎம்சி அடி நீரை அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்