ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023 ஆகிய இரண்டு மசோதாக்களை மக்களவை நிறைவேற்றியுள்ளது.
மறுசீரமைப்பு மசோதா வரவிருக்கும் 114 இடங்களைக் கொண்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற அவையில் "காஷ்மீரில் குடியேறியவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் (PoK) மற்றும் பழங்குடியினருக்கு" இடங்களை ஒதுக்க முயல்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சட்டமன்றத்தில் ஆரம்பத்தில் 100 உறுப்பினர்கள் இருந்த நிலையில், இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான (PoK) உறுப்பினர்கள் 24 பேர் உள்ளனர்.
1988 ஆம் ஆண்டில், இந்த இடங்கள் 111 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த 24 இடங்கள் அவையின் குறைந்தப்பட்ச வருகைக்கான கணக்கீட்டில் பரிசீலிக்கப் படுவதில்லை.
இது லடாக்கிற்கான நான்கு இடங்கள் உட்பட மொத்தம் 87 இடங்களில் போட்டியிட வைக்கிறது.
2020 ஆம் ஆண்டில் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, PoK பகுதிக்கான இடங்கள் உட்பட மொத்த இடங்கள் 114 ஆக உயர்ந்தது.
சட்டசபைக்கு 5 உறுப்பினர்களை நியமிக்க மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
இவர்களில் இருவர் பெண்கள், ஒருவர் காஷ்மீரில் குடியேறியவர் மற்றும் ஒருவர் PoK பகுதியைச் சேர்ந்தவர் என்ற நிபந்தனைக்கு உட்பட்டது ஆகும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (சட்டமன்றத்துடன் கூடியது) மற்றும் லடாக் (சட்டமன்றம் இல்லாமல்) எனும் இரு ஒன்றியப் பிரதேசங்களாக மறுசீரமைக்க ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 அதிகாரம் வழங்குகிறது.
தற்போது முதன்முறையாகப் பழங்குடியினருக்கு 9 உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயல்கிறது.
புதிய இடஒதுக்கீடு மசோதாவானது, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம், 2004 என்ற சட்டத்தில் உள்ள "நலிந்த மற்றும் பின்தங்கிய வகுப்பினர்" என்ற சொல்லை "பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்று மாற்றுகிறது.