TNPSC Thervupettagam

கியாசனூர் வன நோய்

March 4 , 2024 137 days 221 0
  • பொதுவாக குரங்குக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசனூர் வன நோய் (KFD) பாதிப்புடன்  கர்நாடகா மாநிலம் போராடி வருகிறது.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல், மாநிலத்தில் 49 குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • ஃபிளவிவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கியாசனூர் வன நோய் வைரஸால் (KFDV) குரங்குக் காய்ச்சல் ஏற்படுகிறது.
  • இந்த வைரஸ் முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் கியாசனூர் வனப் பகுதியில் ஒரு நோய்வாய்ப்பட்டக் குரங்கிலிருந்து கண்டறியப்பட்டது.
  • முதன்மையாக ஒட்டு உண்ணி கடித்தல் அல்லது பாதிக்கப்பட்ட விலங்கு, குறிப்பாக நோய் வாய்ப்பட்ட அல்லது சமீபத்தில் இந்தப் பாதிப்பினால் உயிரிழந்த குரங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
  • ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவியதற்கான எந்தவொருப் பதிவும் தற்போது வரையில் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்