மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆனது, கொச்சியில் உள்ள மேக்கர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் ‘கிராஃபீன்-அரோரா திட்டத்தை’ அறிமுகப் படுத்தியது.
இந்தத் திட்டமானது கேரளாவின் எண்ணிமப் பல்கலைக்கழகத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.
இது ஆராய்ச்சிக்கும் வணிகமயமாக்கலுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்படும்.
இது பல்வேறு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகள் கிராஃபீன் தொழில் நுட்பங்களை உருவாக்கி மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான வசதியை வழங்குகிறது.
கிராஃபீன் என்பது கிராஃபைட்டிலிருந்துப் பிரித்தெடுக்கப்படுகின்ற, தூய கார்பனால் ஆன கனிமமாகும்.
பென்சிலின் உள்ளக எழுதுகோல் போன்ற பல்வேறு அன்றாடப் பொருட்களில் நாம் பயன்படுத்தும் இயற்கையின் மிக முக்கியமான கூறுகளில் இதுவும் ஒன்றாகும்.
இது உலகின் மிக மெல்லிய, வலிமையான மற்றும் மின்சாரம் மற்றும் வெப்பம் ஆகிய இரண்டையும் கடத்தும் வகையிலான பொருளாகும்.
இது தாமிரத்தை விட அதிகளவில் மின்சாரத்தைக் கடத்துகிறது.
இது எஃகினை விட 200 மடங்கு வலிமையானது ஆனால் ஆறு மடங்கு இலகுவானது.