TNPSC Thervupettagam

கிரீன்லாந்தின் உருகும் பெருங்கடல் பற்றிய ஆய்வுப் பணி - நாசா

February 2 , 2022 901 days 472 0
  • பொதுவாக OMG ஆய்வுப்பணி என குறிப்பிடப்படும் கிரீன்லாந்தின் உருகும் பெருங் கடல் பற்றிய ஆய்வுப் பணியானது நாசாவால் தொடங்கப்பட்டதாகும்.
  • இது ஐந்தாண்டு அளவிலான ஒரு ஆய்வுப்பணியாகும்.
  • இது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று முடிவடைந்தது.
  • இந்த ஆய்வுப்பணியானது முதன்மையாக கிரீன்லாந்து பகுதியில் ஏற்பட்ட  பனி இழப்பை அளவிடுகிறது.
  • கிரீன்லாந்தின் அனைத்துப் பனிகளும் உருகினால், உலகக் கடல் மட்டம் 7.4 மீட்டர் என்ற அளவிற்கு உயரும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
  • கிரீன்லாந்தில் உள்ள பனிக்கட்டிகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக உருகி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்