TNPSC Thervupettagam

கிறிஸ்துவ தேவாலய அழைப்பு

May 17 , 2019 1925 days 1073 0
  • பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரான் மற்றும் நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆகியோர் “கிறிஸ்துவ தேவாலய அழைப்பு” என்ற ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கவிருக்கின்றனர்.
  • இது யாரையும் கட்டுப்படுத்தாத வகையிலான ஒப்பந்தங்களின் தொகுப்பாகும். இந்த ஒப்பந்தத்தில் அரசாங்கக் குழுக்கள் மற்றும் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்கள் கையெழுத்திடவிருக்கின்றன.
  • தனியார் நிறுவனங்கள் மற்றும் முக்கியமான அரசாங்கங்கள் ஆகிய இரண்டும் கையெழுத்திடும் இது போன்ற வகையைச் சேர்ந்த முதலாவது ஆவணம் இதுவாகும்.
  • இது கையொப்பமிடப்பட்ட நாடுகளை தீவிரவாத ஒழிப்பு, சமூக ஊடகம் மற்றும் இதர ஊடகங்களினால் ஏற்படும் தீவிரவாத பாதிப்பை ஒழிப்பது ஆகியவை குறித்து உறுதிமொழி ஏற்குமாறு கேட்டுக் கொள்ளவிருக்கின்றது.
  • இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மசூதித் தாக்குதல்கள் என்பது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் உள்ள மசூதிகளில் நிகழ்த்தப்பட்ட 2 தொடர் தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்