பப்புவா நியூ கினியாவில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய மலையான கிலுவி மலையில் ஏறிய முதலாவது இந்தியராக இந்திய மலையேற்ற வீரரான சத்யரூப் சித்தாந்தா உருவெடுத்துள்ளார்.
இவர் இந்த மலையின் உச்சியான 4327 மீட்டரை அடைந்துள்ளார். பப்புவா நியூகினியாவில் உள்ள முதலாவது மிகப்பெரிய மலையான வில்கெம் மலைக்கு அடுத்த இடத்தில் இது உள்ளது.
தற்பொழுது வரை இவர் 7 எரிமலைகளில் 5 எரிமலைகளின் உச்சியை அடைந்து உள்ளார்.