பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷனுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்தியப் பிரதேச அரசின் கிஷோர் குமார் சம்மன் தேசிய விருது வழங்கப் பட்டுள்ளது.
கிஷோர் குமார் சம்மன் விருதின் நடுவர் அமைப்பானது புகழ்பெற்ற இந்தி சினிமா நடிகையான வகீதா ரஹ்மான் என்பவரை 2017-18 ஆம் ஆண்டிற்கான விருதுக்குத் தேர்வு செய்துள்ளது.
இந்த விருது பற்றி
புகழ்பெற்ற பின்னணிப் பாடகரும் பல்துறை வல்லுனருமான கிஷோர் குமாரின் நினைவாக கிஷோர் குமார் தேசிய விருது என்ற ஒரு விருது நிறுவப் பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கலாச்சாரத் துறையால் இந்த விருது நிறுவப் பட்டுள்ளது. சினிமாத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப் படுகின்றது.
இது ஒரு சான்றிதழ் மற்றும் ரூ 2 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த விருதைப் பெற்ற முதலாவது நபர் ரிஷிகேஷ் முகர்ஜி (1997-98) ஆவார்.