TNPSC Thervupettagam

கீழடி அகழாய்வு – ஏழாம் கட்டம்

October 26 , 2021 1004 days 803 0
  • தமிழக மாநில தொல்லியல் துறையானது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி, கொந்தகை மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியது.
  • ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளானது தமிழக மாநில தொல்லியல் துறையினால் நடத்தப் பட்டது.
  • கீழடி என்பது குறைந்தபட்சம் 2,600 வருடங்கள் பழமையான ஒரு நகர்ப்புற குடியிருப்புப் பகுதியாகும்.
  • இந்த அகழாய்வின் ஏழாம் கட்டத்தின் சிறப்பம்சமானது உறை கிணறுகள் ஆகும்.
  • இந்த உறை கிணறுகளானது ஊற்றுகள் மற்றும் தண்ணீர் எடுக்கும் கிணறுகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
  • அகழாய்வுத் தளங்களில் ஒரு திறந்தவெளி அருங்காட்சியகத்தை நிறுவத் திட்டமிட்டுள்ள நிலையில் அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் அந்த இடங்களை மண்ணைக் கொண்டு நிரப்பாமல் அப்படியே விடுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த அருங்காட்சியகமானது அமைக்கப்பட்டால் இது தமிழ்நாட்டின் இது போன்ற முதல்வகை அருங்காட்சியகமாக திகழும்.
  • இங்கு கண்டெடுக்கப்பட்ட மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறை கிணறு மற்றும் இதர சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், இங்கு வாழ்ந்த மக்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் (வட இந்தியா) வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர் என்ற கோட்பாட்டினை வலுப்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்