TNPSC Thervupettagam

கீழடியில் கருங்கல் பாறை வகை

July 7 , 2020 1475 days 875 0
  • பண்டைய தொல்லியல் தளமான கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 6வது கட்ட அகழாய்வின் போது கருங்கல்லால் உருவாக்கப்பட்ட 4 கிலோ எடையுள்ள கற்கள் கண்டெடுக்கப் பட்டன.
  • இது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியின் ஆற்றங் கரையில் அமைந்துள்ளது.
  • இங்கு கண்டெடுக்கப்பட்ட கோள வடிவப் பொருட்கள் தட்டையான அடிப்பாகம் மற்றும் பளபளப்பான மேற்பரப்புடன் கறுப்பு நிறத்தில் உள்ளன.
  • இங்கு மரக்கரியானது பொதுவாக அனைத்திலும் காணப்படுகின்றது.
  • இங்கு ஒரு உலையானது 0.61 மீட்டர் ஆழத்தில் காணப்பட்டுள்ளது. இது தீ பயன்படுத்தப் பட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துகின்றது.
  • இந்த அனைத்துக் கண்டுபிடிப்புகளும் தொழிற்துறை தளமான கீழடியில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதற்கான சாத்தியக் கூறைக் குறிக்கின்றது.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் இந்தத் தளத்தில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு ஆகியவற்றிற்கிடையே வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான சாத்தியக் கூறைக் குறிக்கின்றன.
  • முன்னதாக ஜுன் மாதத்தில், ஒரு குழந்தையின் எலும்பு மீதிகள் கொந்தகையில் கண்டெடுக்கப் பட்டன.
  • 6 ஆம் கட்ட அகழாய்வானது சிவகங்கை மாவட்டத்தின் கீழடி, கொந்தகை, மணலூர் மற்றும் அகரம் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்