TNPSC Thervupettagam

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019

March 12 , 2024 130 days 607 0
  • மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) விதிகளை சமீபத்தில் அறிவித்தது.
  • நாடு முழுவதிலும் இந்தச் சட்டத்தினை அமலாக்குவதற்கு இது வழி வகுக்கிறது.
  • 2024 ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்தம்) விதிகள் என அழைக்கப்படும் இந்த விதிகள் ஆனது, 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் தகுதி பெற்ற நபர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க உதவும்.
  • ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து, சீக்கிய, சமண, புத்த, கிறிஸ்தவ மற்றும் பாரசீக அகதிகள் இந்தியக் குடியுரிமையினைப் பெறுவதை இந்தச் சட்டம் எளிதாக்குகிறது.
  • 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக இந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கச் செய்வதை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் CAA நிறைவேற்றப்பட்டு, அதன்பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்