TNPSC Thervupettagam

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025

February 20 , 2025 7 days 55 0
  • மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது, 2025 ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவினை அறிமுகப்படுத்த உள்ளது.
  • இது வெளிநாட்டினரின் குடியேற்றம் மற்றும் பெயர்வினைக் கையாளும் தற்போதைய நான்கு சட்டங்களையும் ரத்து செய்யும்.
  • முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் ஆனது தற்போதுள்ள சட்டங்களுக்கு மாற்றாக முன் வைக்கப்படும்.
    • கடவுச் சீட்டு (இந்தியாவிற்குள் நுழைதல்) சட்டம், 1920
    • வெளிநாட்டினரின் பதிவுச் சட்டம், 1939
    • வெளிநாட்டினர் சட்டம், 1946; மற்றும்
    • குடியேற்றம் (போக்குவரத்து நிறுவனங்களின் பொறுப்பு) சட்டம், 2000.
  • முன்மொழியப்பட்ட இந்தச் சட்டமானது, இந்தியாவிற்குள் வெளிநாட்டினரின் நுழைவு, வெளியேற்றம் மற்றும் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்த அல்லது ஒழுங்குபடுத்தச் செய்வதற்கு மத்திய அரசிற்கு அதிகாரத்தை வழங்குகிறது.
  • இந்தப் புதிய மசோதாவில் அங்கீகரிக்கப்படாத உள்நுழைவிற்கு என்று சுமார் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், போலி கடவுச் சீட்டிற்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.
  • இதில் வெளிநாட்டுக் குடிமக்களை சேர்க்கைக்கு அனுமதிக்கும் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களின் பங்கு, கடவுச் சீட்டு மற்றும் நுழைவு இசைவுச் சீட்டுகள் தொடர்பான விவகாரங்களுடன் குறிப்பிடப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்