TNPSC Thervupettagam

குடும்பத்திற்கு நிதி உதவி

February 16 , 2019 2015 days 518 0
  • ஹங்கேரி அரசு அதிகக் குழந்தைகளுடன் கூடிய குடும்பங்களுக்கு மிகப் பெருமளவில் நிதி உதவிகளையும் மானியங்களையும் உயர்த்தியிருக்கின்றது.
  • இந்த அறிவிப்பு பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதற்காகவும் குறைந்துக் கொண்டு வரும் ஹங்கேரியின் மக்கள்தொகையை அதிகப்படுத்துவதற்காகவும் வேண்டி அறிவிக்கப்பட்டது.
  • நிதிச் சலுகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது
    • குறைந்தது 4 குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதுமான தனிநபர் வருமானவரி விலக்கு.
    • மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஏழு இருக்கை கொண்ட வாகனத்தை வாங்குவதற்காக 8825 டாலர்கள் மானிய உதவி.
    • முதல்முறையாக 40 வயதிற்கு உள்ளாக திருமணம் செய்யும் பெண்களுக்கு 35300 டாலர்களுக்கு குறைந்த வட்டியிலான கடன்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்