மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கைக்கு குய்லின்-பாரே நோய்ப் பாதிப்பு / நோய்க்குறி (GBS) ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் கோலிஃபார்ம், E. கோலை, நோரோவைரஸ் மற்றும் C. ஜெஜூனி ஆகிய பாக்டீரியாக்கள் இருப்பதை ஒரு பகுப்பாய்வு உறுதிப்படுத்தியது.
குய்லின்-பாரே நோய்க்குறி என்பது நோயெதிர்ப்பு அமைப்பு ஆனது நரம்புகளைத் தாக்கி, பலவீனம், உணர்வின்மை அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும் ஒரு நிலை ஆகும்.