குரங்குக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசானூர் காட்டு நோய்க்கு வட கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் குறைந்த பட்சமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1957 ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்த நோய் கண்டறியப்பட்டது. இந்நோயானது கியாசானூர் காட்டு நோய் வைரசினால் (KFDV - Kyasanur Forest disease virus) ஏற்படுகிறது.
KFDV ஆனது மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிளாவிவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.
கியாசானூர் காட்டு நோய் என்பது மிகவும் தொற்றும் தன்மையுள்ள ஹிமோகிராஹிக் வைரஸ் காய்ச்சலாகும். மேலும் இது அதிக இறப்பு விகிதங்களுடன் தொடர்புடையது.
உண்ணி கடித்தல் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகள், சமீபத்தில் நோய் பாதிப்புக்கு உள்ளான விலங்குகள், சமீபத்தில் இறந்த குரங்குகள் ஆகியவற்றின் மூலம் இந்த நோய் பரவுகின்றது.