மதியிறுக்க கோளாறு (ASD) உள்ள இரண்டு குழந்தைகளின் சிகிச்சைக்காக குருத்தணு சிகிச்சையினை மேற்கொள்வதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியத்தின் (EMRB) பரிந்துரையை எதிர்த்து இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.
முன்னதாக மதியிறுக்க கோளாறுக்கு குருத்தணு சிகிச்சையைப் பயன்படுத்தக் கூடாது என்று அந்த வாரியம் பரிந்துரைத்தது.
குருத்தணு செல்கள் என்பது மற்ற அனைத்துச் சிறப்புச் செயல்பாடுகள் கொண்ட செல்களை உருவாக்கும் செல்களாகும்.
குருத்தணு செல்களின் மீளுருவாக்கப் பண்புகள் ஆனது அவற்றை மருத்துவத் துறையில் மிகவும் மதிப்புமிக்கதாக மாற்றுகின்றன.
அதனால் தான் குருத்தணு சிகிச்சைகள் மீளுருவாக்க மருந்து என்றும் அழைக்கப் படுகின்றன.
மதியிறுக்க கோளாறு என்பது பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றவர்களுடன் கருத்துப் பரிமாற்றம், தகவல் தொடர்பு, கற்றல் மற்றும் நடத்தை ஆகியவற்றினைப் பாதிக்கும் ஒரு நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.