குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில்நுட்ப மையம்
January 15 , 2022 920 days 446 0
புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில் நுட்ப மையத்தினை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இது மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும்.
புதுச்சேரியில் நடைபெற்ற 25வது தேசிய இளைஞர் விழா (2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதி) கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்வின் போது இது திறந்து வைக்கப் பட்டது.