TNPSC Thervupettagam

குல்தீப் நாயர் பத்ரகரிதா சம்மான் விருது

November 16 , 2022 614 days 291 0
  • காந்தி அமைதி அறக்கட்டளையானது, 2022 ஆம் ஆண்டிற்கான தனது மதிப்புமிக்க குல்தீப் நாயர் பத்ரகரிதா சம்மான் விருதினை அறிவித்துள்ளது.
  • ஜனநாயகம் சார்ந்த மதிப்புகள் மற்றும் சுதந்திரமான ஊடகங்களுக்கெனப் பங்காற்றுகின்ற, இந்திய மொழிப் பத்திரிகையாளர்களுக்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்த விருதானது தி வயர் என்ற பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் அர்ஃபா கானும் ஷெர்வானிக்கு வழங்கப்பட்டது.
  • பத்திரிக்கையாளர், எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான குல்தீப் நாயரின் பங்களிப்பினைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இந்த விருதினைப் பெற்றவர் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளர் மற்றும் யூடியூப் ஊடகத்தினைச் சார்ந்த அஜித் அஞ்சும் என்பவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்