TNPSC Thervupettagam

குழந்தைகளின் சாலைப் பாதுகாப்பு நெருக்கடி

February 11 , 2025 16 days 54 0
  • யுனிசெஃப் அமைப்பானது, உலக சுகாதார அமைப்பின் காயங்கள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மையத்துடன் இணைந்து, NIMHANS என்ற நிறுவனத்தில் இந்தியாவில் குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினருக்காக வேண்டி சாலைப் பாதுகாப்பிற்கான தேசிய செயல் திட்டத்தினை வெளியிட்டது.
  • இது குழந்தைகளிடையே சாலைப் போக்குவரத்து விபத்தினால் ஏற்படும் காயங்கள் (RTI) குறித்த மேசமான புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே பதிவாகும் அதிகமான உயிரிழப்பிற்கு RTI தற்போது முக்கிய காரணமாக உள்ளது என்பதோடு இது அனைத்து சாலை விபத்து சார்ந்த உயிரிழப்புகளிலும் 10% ஆகும்.
  • ஒவ்வொரு நாளும், நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 45 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
  • 2022 ஆம் ஆண்டில் மட்டும், இந்த வயது குழுவினரிடையே சுமார் 16,443 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, இருப்பினும் குறைவான அறிக்கையிடல் காரணமாக உண்மையான எண்ணிக்கை 20% அதிகமாக இருக்கலாம்.
  • 2011 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சாலை விபத்துகளில் சுமார் 198,236 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • குறிப்பிடத்தக்க வகையில், இந்த உயிரிழப்புகளில் சுமார் 75% ஆனது 14 முதல் 17 வயது உடையவர்களிடையே பதிவாகியுள்ளன, மேலும் கடந்த பத்தாண்டுகளில் இந்த வயது குழுவில் இந்த எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்