TNPSC Thervupettagam

குழந்தைகளின் பண வறுமையின் உலகளாவியப் போக்குகள்

September 28 , 2023 295 days 202 0
  • உலக வங்கி குழு மற்றும் UNICEF யுனிசெஃப் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட சர்வதேச வறுமைக் கோடு வரம்பின் படி குழந்தைகளின் பண வறுமையின் உலகளாவியப் போக்குகள் என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகின் மிக ஏழ்மையான மக்கள் தொகையின் எண்ணிக்கையானது குழந்தைகளின் எண்ணிக்கையால் அதிகரித்து வருகிறது.
  • குழந்தைகளின் வறுமை குறித்த சமீபத்திய மதிப்பீடு ஆனது 2.15 டாலர் என்ற புதிய வறுமைக் கோடு வரம்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், உலகின் மொத்த ஏழை மக்கள் தொகையில் 52.5 சதவீதம் பேர் குழந்தைகளாக உள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டில், உலகில் உள்ள குழந்தைகள் எண்ணிக்கையில் 15.9 சதவீதம் பேர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் வாழ்ந்தனர் என்ற நிலையில் இது வளர் இளம் பருவத்தினர் மத்தியில் 6.6 சதவீதமாக இருந்தது.
  • இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி, 11.5 சதவீதக் குழந்தைகள் மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் வாழ்கின்றனர்.
  • எண்ணிக்கையில், 52 மில்லியன் இந்தியக் குழந்தைகள் ஏழைகளாக உள்ளனர்.
  • மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் வாழும் குழந்தைகளில் 18.3 சதவீதம் (99 மில்லியன்) பேர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான 2.15 டாலர் என்ற புதிய வறுமைக் கோடு வரம்பில் உள்ள சராசரி வறுமை இடைவெளியானது வளர் இளம் பருவத்தினரை விட (1.9 சதவீதம்) அதிகமாக 5.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்