அசாம் மாநிலக் காவல்துறையானது, கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் மேற் கொள்ளப்பட்ட குழந்தைத் திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 2,000க்கும் மேற்பட்ட ஆண்களைக் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான POCSO சட்டம் மற்றும் குழந்தை திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 முதல் 18 வயதுக்குட்பட்டப் பெண்களைத் திருமணம் செய்தவர்கள் மீது 2006 ஆம் ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்.