TNPSC Thervupettagam

குழந்தைப் பருவ புற்றுநோய் பதிவேடு - முதல் அறிக்கை

February 2 , 2025 21 days 91 0
  • சென்னை PBCCR (Chennai Population-Based Childhood Cancer Registry) ஆனது நாட்டின் முதல் பிரத்யேக குழந்தைப் பருவ புற்றுநோய் பதிவேடு ஆகும்.
  • இது 2022 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் 241 குழந்தைப் பருவப் புற்றுநோய் பாதிப்புகளை (19 வயதுக்குட்பட்ட 139 சிறுவர்கள் மற்றும் 102 சிறுமிகள்) அதில் பதிவு செய்தது.
  • தமிழ்நாட்டில் ஓராண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 96,000 புதிய நோயாளிகளில் 2,500 பேர் குழந்தைகள் ஆவர்.
  • இதன் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று, அறிகுறி தோன்றியதிலிருந்து நோயறிதல் வரையிலான சராசரி காலம் 12.5 நாட்கள் ஆகும்.
  • மேலும், நோயறிதலிலிருந்து சிகிச்சை தொடங்கும் வரையிலான சராசரி இடைவெளி காலம் இரண்டு நாட்கள் ஆகும்.
  • இதன்படி தெளிவாகக் கண்டறியப்பட்ட பாதிப்புகளில், சுமார் 81.2% பேர் நோய்க் குணப்படுத்தும் சிகிச்சையைப் பெற்றனர்.
  • இந்திய மக்கள்தொகை அடிப்படையிலான சில பதிவேடுகளில், சென்னையின் வயது வாரியான குழந்தைப் புற்றுநோய்ப் பாதிப்பு விகிதம் (ஒரு மில்லியனுக்கு 136.3) ஆனது நாட்டிலேயே மிக உயர்ந்ததாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்