அசாமில் வெள்ள முன்னறிவிப்பு அமைப்பானது (FEWS - Flood Early Warning System) ஆற்றல் மற்றும் வள மைத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
இது முழுவதுமாக தானியங்கும் வகையில் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கூறாகும். இது குவஹாத்தியில் கடுமையான வெள்ளம் மற்றும் மழை குறித்த தகவல்களை உள்ளூர் அதிகாரிகளுக்கு வழங்க உள்ளது.
சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு அடுத்து FEWS அமைப்பைக் கொண்ட மூன்றாவது நகரம் குவஹாத்தி ஆகும்.
மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகமானது இதே போன்ற ஒரு அமைப்பை கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் அமைக்க உள்ளது.