புகழ்பெற்ற ஒடியா மொழிக் கவிஞரான டாக்டர் இராஜேந்திர கிஷோர் பாண்டா என்பவருக்கு 2020 ஆம் ஆண்டிற்கான குவெம்பு ராஷ்ட்ரிய புரஷ்கர் என்ற விருதானது வழங்கப் பட்டுள்ளது.
இது மறைந்த கவிஞர் குவெம்பு அவர்களின் நினைவாக வழங்கப்படும் ஒரு தேசிய விருதாகும்.
டாக்டர் இராஜேந்திர கிஷோர் பாண்டா அவர்களுக்கு 2010 ஆம் ஆண்டில் கங்காதர் தேசிய விருதும் 1985 ஆம் ஆண்டில் சாகித்திய அகாடெமி விருதும் வழங்கப் பட்டது.