September 3 , 2022
689 days
546
- இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் குஷியாரா நதியின் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவை இறுதி செய்தன.
- இந்தியா-வங்காளதேச கூட்டு நதிகள் ஆணையத்தின் 38வது அமைச்சர்கள் கூட்டத்தின் போது இது கையெழுத்தானது.
- குஷியாரா நதியானது, பராக் நதியின் கிளையாக இந்திய-வங்காளதேச எல்லையை உருவாக்குகிறது.
- சுர்மாவில் இருந்து பிரியும் போது, அது பராக் நதியின் கிளையாக உருவெடுக்கிறது.
- வங்காள தேசத்தில் சிறிது தூரம் பாய்ந்த பிறகு, அது மீண்டும் சுர்மா நதியுடன் இணைகிறது.
- இந்த ஒருங்கிணைந்த நதி இங்கு மேக்னா நதி என்று அழைக்கப்படுகிறது.
- இந்தியாவில் மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் இந்த நதியின் மூலம் தண்ணீரைப் பெறுகின்றன.
- இந்தியாவும் வங்காளதேசமும் தங்களுக்கு இடையே 54 நதிகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்கின்றன.
- வங்காள தேசத்தின் அனைத்து ஆறுகளும் இந்தியாவில் உற்பத்தியாகின்றன அல்லது அதன் வழியாக பாய்கின்றன.
Post Views:
546