TNPSC Thervupettagam

கெம்பேகவுடா சர்வதேச விருது

June 29 , 2022 753 days 371 0
  • கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் S.M.கிருஷ்ணா, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூத்த தொழிலதிபர் N.R. நாராயண மூர்த்தி மற்றும் முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே ஆகியோர் 2022 ஆம் ஆண்டு கெம்பேகவுடா சர்வதேச விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
  • கெம்பே கவுடா பெங்களூரு நகரினை வடிவமைத்தக் கட்டிடக் கலைஞர் ஆவார்.
  • கெம்பேகவுடா விருதானது நடப்பிரபு கெம்பேகவுடா விருது என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது பிருஹத் பெங்களூரு மகாநகர பலிகே என்ற அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப் படும் ஒரு குடிமை விருது ஆகும்.
  • விஜயநகரப் பேரரசின் மன்னர் நடப்பிரபு ஹிரியா கெம்பே கவுடாவின் நினைவாக இந்த விருதிற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இவர் 1537 ஆம் ஆண்டில் பெங்களூரு நகரைக் கட்டமைத்தார்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்