அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு என்ற புகழ்பெற்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் இருந்த நபரான கேசவானந்தா பாரதி சமீபத்தில் காலமானார்.
இவர் கேராளவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள எட்னீர் மடத்தின் தலைமைக் குரு ஆவார்.
இவர் கேசவானந்தா பாரதி எதிர் கேரள அரசு என்ற வழக்கில் மனுதாரராக இருந்தார்.
இவர் 1970 ஆம் ஆண்டில், 1969 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட “கேரள நிலச் சீர்த்திருத்தங்கள் சட்டம், 1963” என்ற ஒரு சட்டத்தின் மூலம் மடத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் கேரள அரசின் முயற்சியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
இவர் இந்த நடவடிக்கையானது அவரது அடிப்படை மதச் சுதந்திரம் (சரத்து 25), மதம் சார்ந்த பிரிவு மீதான உரிமை (சரத்து 26) மற்றும் சொத்துரிமை (சரத்து 31) ஆகியவற்றை மீறுவதாக வாதாடினார்.
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டை வலியுறுத்திய இந்திய உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற தீர்ப்பு இதுவாகும்.
இந்த வழக்கானது சரத்து 368ன் மூலம் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்புத் திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை பாதித்தால் மட்டுமே அது அடிப்படை உரிமைக்கான மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று கூறியது.