சர்வதேச ராணுவப் பயிற்சி போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று இந்திய இராணுவமானது தனது தனித்துவமான ராணுவத் திறமையினைச் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியுள்ளது.
வேல்ஸில் உள்ள பிரித்தானிய ராணுவத்தின் தலைமையகமான ப்ரெகானை தளமாகக் கொண்ட 160வது (வெல்ஷ்) படைப்பிரிவினால் இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
1959 ஆம் ஆண்டு முதல் முன்னாள் கேம்ப்ரியன் ரோந்துப் பயிற்சியானது ஆண்டு தோறும் நடத்தப் படுவதோடு உலகம் முழுவதும் உள்ள ராணுவக் கூட்டாண்மை நாடுகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கிறது.
இது நேட்டோவால் நடத்தப்படும் கடினமான ரோந்து சோதனைப் பயிற்சி என்று குறிப்பிடப் படுகிறது.
2021 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்தில் நடைபெற்ற இதே நிகழ்ச்சியில் இந்திய ராணுவமானது தங்கப் பதக்கத்தினை வென்றது.