சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019 (Citizenship Amendment Act - CAA) என்ற சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய இந்தியாவின் முதலாவது மாநிலமாக கேரள மாநிலம் உருவெடுத்துள்ளது.
கேரள அரசாங்கத்தின் கூற்றுப் படி, CAA சட்டமானது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கையான மதச்சார்பின்மைக்கு முரணானதாகும்.
குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 ஆனது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப் பட்டது.
இந்தச் சட்டம் 1955 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தியது.
இது இந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி ஆகிய மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமையைப் பெற அனுமதிக்கின்றது.
இந்தச் சட்டம் குறித்த பிரச்சினை என்னவென்றால், இச்சட்டத்தில் முஸ்லிம்கள் இடம் பெறவில்லை என்பதாகும்.