TNPSC Thervupettagam

கேரளாவின் புதிய ‘மின்னணு கழிவு’ அகற்றுதல் திட்டம்

August 27 , 2017 2517 days 832 0
  • சமீபத்தில் கேரள அரசு அதன் மாநில அரசுப் பள்ளிகளில் புதிய மின்னணு கழிவு அகற்றும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் நோக்கம் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களிலும் வேறுபல மையங்களிலும் உள்ள மின் கழிவுகளை கையாள்வது ஆகும்.
  • இந்த திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 10000 பள்ளிகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து தோராயமாக 1 கோடி கிலோகிராம் எடையுள்ள மின்கழிவுகளை விஞ்ஞான முறையில் மறுசுழற்சி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் கிடைக்கும் நிதியில் புதிய கணினிகள் அதே நிறுவனங்களுக்கு வாங்கப்படும்.
  • இந்த மின் கழிவுப் பட்டியலில் 2000ம் ஆண்டிலிருந்து மாநிலத்தில் பயன்படுத்தாமல் உள்ள பழைய மின்னணுத் திரைகள், சுட்டிகள் [Mouse], கீ.போர்டுகள் மற்றும் தடங்கலிலா மின்திறன் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
  • இது தூய்மையான கேரளா நிறுவனமும், IT @ School Project என்று முன்னர் அறியப்பட்ட கேரள உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கூட்டு முயற்சி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்