கேரளாவின் முதல் கேரவன் பூங்காவானது இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலமான வாகமனில் (Vagamon) அமைக்கப்பட உள்ளது.
இந்த மாநில அரசின் புதிய கேரவன் சுற்றுலாக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தப் பூங்கா பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது.
கோவிட்-19 பரவல் காரணமாக மக்கள் வெளியே செல்லவோ அல்லது பயணிக்கவோ முடியாத நேரத்தில் விடுமுறையைக் கொண்டாடுவதற்குப் பாதுகாப்பான ஒரு வழி முறையாக அம்மாநில சுற்றுலாத் துறையினால் கேரவன் சுற்றுலா அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.