கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் மாற்றுருவானது வங்காளதேச வைரசின் ஒரு மாற்றுருவாகும்.
இது மனிதர்களிடமிருந்து மனிதருக்குப் பரவுகிறது என்பதோடு, இது குறைந்த அளவில் நோய்த் தொற்று வாய்ப்புகளைக் கொண்டிருந்த போதிலும், இது தற்போது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வைரசாக வகைப்படுத்தப்படுகிறது.
இன்று வரை இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை.
இது பாதிக்கப்பட்ட வெளவால்கள், பன்றிகள் அல்லது மனிதர்களின் ஆகியோரின் உடல் திரவங்களுடனான தொடர்பு மூலம் பரவுகிறது.
இந்த வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 75% வரை உள்ளது.