கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டின் 3வது பதிப்பானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசாமின் குவஹாத்தியில் நடைபெற உள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த விளையாட்டானது இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள்.
21 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு 1000 குழந்தைகளைத் தயார்படுத்துவதற்காக அக்குழந்தைகளுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 5,00,000 உதவித் தொகை வழங்கப் படுகின்றது.
இந்த நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் 20 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் அனைத்து 36 மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் பங்கேற்க உள்ளன.