TNPSC Thervupettagam

கொரானா வைரஸ் ஆய்வுக் கூடச் சோதனை முறை

May 10 , 2020 1535 days 662 0
  • இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையமானது (CCMB - Centre for Cellular and Molecular Biology) நாட்டில் கோவிட் – 19 வைரஸின் மாதிரிகளைக் கலந்து ஆராய்ச்சி செய்யும் ஒரே மையமாகும். 
  • மாதிரிகள் கலப்புச் சேகரிப்பு முறை என்பது வைரஸ் மாதிரிகளைச் சேகரிக்கும் ஒரு செயல்முறையாகும்.
  • ஹைதராபாத்தில் உள்ள CCMB ஆனது பெங்களூருவில் உள்ள ஐஸ்டெம் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (தனியார் நிறுவனம்) இணைந்துள்ளது.
  • இது மனித உயிரணுக்களில் புதிய கொரானா வைரசை வளர்க்கும் ஒரு முயற்சியாகும். இது வைரசிற்காக சாத்தியமுள்ள தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் தீர்க்கும் மருந்துகளின் ஆய்வகச் சோதனைக்கு அனுமதிக்கின்றது.
  • இந்தக் குழுவானது ஐஸ்டெமின் மனித நுரையீரல் தோல் மேற்புறச் செல் கலாச்சார முறையைப் பயன்படுத்துகின்றது.
  • இது கோவிட் – 19 நோய்த் தொற்றின் நோயியல் மற்றும் மூலக்கூறுப் பண்புகளை அறிந்து கொள்ள உதவுகின்றது.
  • ஆய்வகத்தில் (கண்ணாடியில்) மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனை என்பது பிரித்தெடுக்கப் பட்ட திசுக்கள், உயிரணுக்கள் மற்றும் உறுப்புகள் ஆகியவற்றைக் கொண்டு வாழும் உயிரினத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் ஒரு சோதனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்