TNPSC Thervupettagam

கொரோனிவியா வேளாண் கூட்டுப் பணி

December 9 , 2022 590 days 293 0
  • கொரோனிவியா வேளாண் கூட்டுப் பணிக்கு (KJWA) இந்தியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
  • இது ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தக் கட்டமைப்பின் கீழ் ஒரு முக்கிய முடிவாகும்.
  • கொரோனிவியா வேளாண் கூட்டுப் பணி வேளாண் துறையில் இருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயு உமிழ்வினைக் குறைக்க முயல்கிறது.
  • பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வேளாண் துறையின் தனித்துவமானத் திறனை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மண், ஊட்டச்சத்துப் பயன்பாடு, கால்நடைகள், நீர், வேளாண் துறையில் ஏற்பு மற்றும் சமூக-பொருளாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு சார்ந்த பரிமாணங்களை அளவிடும் முறைகள் ஆகிய ஒன்றோடொன்று தொடர்புடைய 6 துறைகளுக்கான தீர்வினைக் குறிப்பிடுகிறது.
  • வேளாண் துறைகளில் இருந்து வெளிவரும் மாசுக்கள் "ஆடம்பர வாழ்க்கை சார்ந்த" உமிழ்வுகள் அல்ல, அது ஏழைகள் "உயிர் பிழைப்பதற்கான முயற்சியில் வெளியாகும் உமிழ்வுகள்" என்று இந்தியா கூறுகிறது.
  • வளர்ச்சியடைந்த நாடுகள் உலகிற்கு 790 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைட் அளவிலான கார்பன் கடனைச் செலுத்த வேண்டியுள்ளது என்று இந்தியா சுட்டிக் காட்டியது.
  • ஒரு டன்னுக்கு 100 அமெரிக்க டாலர் என்ற மிதமான விலையில் நிர்ணயத்தில் கூட இது சுமார் 79 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும்.
  • உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், தொழில் துறைக்கு முந்தையக் காலத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையில் தெற்காசியா வெளியிட்ட மொத்த கார்பன் உமிழ்வு 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
  • இந்தியாவின் தனிநபர் வருடாந்திர உமிழ்வுகள் உலக சராசரியில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
  • முழு உலகமும் இந்திய நாட்டின் போலவே தனிநபர் உமிழ்வு அளவில் கார்பனை வெளியேற்றினால், பருவநிலை நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்