கொல்கத்தா புத்தகக் கண்காட்சி – 2020ன் 44வது பதிப்பானது கொல்கத்தாவில் தொடங்கப் பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ரஷ்யா ஒரு "முதன்மை நாடாக" கலந்து கொண்டிருக்கின்றது.
கூகை ஆந்தைகள், புல் ஆந்தைகள் மற்றும் முகமூடி ஆந்தைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வகை பறவை இனங்கள் முதல் முறையாக இந்தப் புத்தகக் கண்காட்சியின் அதிகாரப் பூர்வ சின்னமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டன.
2020 ஆம் ஆண்டு இந்தப் புத்தகக் கண்காட்சியின் கருப்பொருள் “ரஷ்யா” என்பதால் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆனது “ரஷ்யா தினமாகக்” கொண்டாடப் படுகின்றது.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி ‘CAA, NRC, NPR ஆகியவற்றை நாங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்லுகின்றோம்?’ என்ற தனது புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.